செவ்வாய், 30 ஏப்ரல், 2019

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! April 30, 2019

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது நிகழ்ந்த தொடர்குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு...

15,600 ஆண்டுகள் பழமையான மனிதரின் காலடித்தடம் கண்டுபிடிப்பு! April 29, 2019

சிலி நாட்டின்  தெற்கு பகுதியில் கண்டறியப்பட்ட மனிதரின் காலடித்தடம் 15,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள சிலி நாட்டின் தென்பகுதியில் உள்ள Osornoவில் மனிதரின் கால்தடம் ஒன்றை கடந்த 2010ம் ஆண்டில் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ஒருவர் கண்டறிந்தார். இது ஏதேனும் மிருகத்தின் கால்தடமாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்ட...

அதி தீவிர புயலாக வலுபெற்றுள்ளது ஃபானி: சென்னை வானிலை மையம் April 30, 2019

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபானி புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாகவும், இது ஒடிசாவை நோக்கி செல்லக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ஃபானி புயல் சென்னையிலிருந்து 575 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளதாகக் கூறினார். இந்த புயல், வடமேற்கு திசையில் பயணித்து...

தமிழகத்தின் சில பகுதிகளில் கோடை மழை...! பொதுமக்கள் உற்சாகம்! April 30, 2019

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் நேற்று கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.  தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஆங்காங்கே தலைகாட்டும் மழையால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜாபுரம்,...

ராணுவத்திற்கு அதிகமாக நிதி ஒதுக்கும் நாடுகளின் பட்டியல் வெளியீடு! April 29, 2019

உலகில் ராணுவத்துக்கு அதிகமாக நிதி ஒதுக்கும் நாடுகளில் இந்தியா 4வது இடம் பெற்றுள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் உலக நாடுகள் தங்கள் ராணுவத்துக்கு செலவிட்ட தொகைகளின் அடிப்படையிலான பட்டியலை, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்கா 649 பில்லியன் டாலர் தொகையை ராணுவத்துக்காக ஒதுக்கி உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாம் இடம் பிடித்துள்ள...

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் பாதுகாப்பு படை வீரர்! April 29, 2019

எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவை குறை கூறி வீடியோ வெளியிட்ட தேஜ் பகதூர் யாதவ், வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாதி , பகுஜன் சமாஜ் கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.   எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து குறை கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதால் பாதுகாப்பு படை வீரர் தேஜ்...

ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்... மத்திய அரசு நிதி ஒதுக்கீடு! April 30, 2019

ஃபானி புயலால் நேரிடும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான வாய்ப்புள்ள தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு 1086 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.  வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபானி புயல், ஆந்திரப்பிரதேசம், ஒடிஷா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக...

பனிமனிதனின் கால்தடத்தின் புகைப்படம் வெளியீடு! April 30, 2019

இமயமலையில் பனிமனிதனின் கால்தடத்தின் புகைப்படத்தை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.  இதுதொடர்பாக இந்திய ராணுவம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மக்கலு ராணுவ முகாம் அருகே இந்த கால் தடம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்தடம் 32 அங்குலம் கொண்ட பிரம்மாண்ட அளவில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஒற்றை கால்தடம் மட்டுமே இருந்நதாக குறிப்பிடப்படுள்ளது.  எட்டி...

திங்கள், 29 ஏப்ரல், 2019

இலங்கையை போல் தமிழகத்திலும் வெடிகுண்டு தாக்குதல் நடக்கும்...’ வீடியோ வெளியிட்ட நபர்! April 29, 2019

இலங்கையை போல் தமிழகத்திலும் 3 மாதங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடக்கும் என சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தொடர் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட இலங்கை தலைநகர் கொழும்பில், இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது. மக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக, தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில், கூடுதல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்....

அதிதீவிர புயலாக மாறவுள்ள ஃபானி புயல்...! April 29, 2019

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் அதிதீவிர புயலாக மாறவுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.    வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 890 கிலோ மீட்டர் தொலைவில், ஃபானி புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மேலும் வலுவடைந்து அதி தீவிர புயலாக மாறும், என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில், வடமேற்கு நோக்கி...

மக்களவைத் தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்! April 29, 2019

ns7.tv நான்காம் கட்ட மக்களவை தேர்தலையொட்டி, மகாராஷ்டிரா உள்பட 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளில், இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல், 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு உட்பட்ட 72 தொகுதிகளுக்கு, இன்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. நான்காம் கட்டத் தேர்தலில், 12 கோடியே...

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே கடும் மோதல்! April 29, 2019

நாடாளுமன்ற மக்களவைக்கு இன்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் பகுதியில் மிகப்பெரிய வன்முறை ஏற்பட்டது.  அன்சோல் பகுதியில் உள்ள வாக்குச் சாவடி அருகே, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக தொண்டர்கள் கடுமையாக மோதிக் கொண்டனர். அங்கு பாதுகாப்பு படையினர், போலீசார் இருந்தும், அவர்கள் முன்னிலையிலே மோதல் நடைபெற்றது....

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! April 29, 2019

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.  கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் ஒன்பது லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததை அடுத்து, தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது....

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

"ஃபானி புயல், தமிழகத்தை தாக்கும் வாய்ப்புகள் குறைவு" : சென்னை வானிலை ஆய்வு மையம் April 28, 2019

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல், தமிழகத்தை தாக்கும் வாய்ப்புகள் குறைவு என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஃபானி புயல் தற்போது இலங்கையின் திருகோணமலையில் இருந்து 850 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்,...

நெருங்கி வரும் புயல்....முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் தமிழக அரசு! April 27, 2019

வங்கக் கடலில் உருவான புயல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைளைத் தீவிரப்படுத்தியுள்ளது.  இதன் காரணமாக, கடலோர பகுதிகள் மட்டுமல்லாமல், அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்குமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பேசிய பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்யகோபால் தெரிவித்தார். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அவர் கேட்டுக்...

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை! April 27, 2019

source ns7.tv புயல் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வரும் 29, 30ம் தேதிகளில் செல்ல  தடைவிதிக்கப்பட்டுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சுற்றுலா தலங்களான பேரிஜம் ஏரி, மோயர் பாயின்ட், குணா குகை, பில்லர் ராக், ஃபைன் மர...

உருவானது ஃபானி புயல்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்! April 27, 2019

வங்கக் கடலில் ஃபானி புயல் உருவாகியுள்ளதையடுத்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  புயல் எச்சரிக்கையை அடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்தனர். ஏற்கெனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர். புயல் எச்சரிக்கையை தொடர்ந்து முட்டம், குளச்சல், கடியப்பட்டினம்,...

பேரவைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: ஸ்டாலின் எச்சரிக்கை! April 26, 2019

பேரவைத் தலைவர் நடுநிலைமை தவறி மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள்மீது  நடவடிக்கை எடுத்தால்,  பேரவைத் தலைவர் மீது திராவிட முன்னேற்றக் கழகம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலை, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன்...

அனைத்து தேர்தல்களையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ள குரங்கணி பகுதி மலைவாழ் மக்கள்! April 27, 2019

அடிப்படை வசதிகளை செய்து தரும் வரை, அனைத்து தேர்தல்களையும் புறக்கணிக்கப் போவதாக தேனி மாவட்டம் குரங்கணி பகுதி முதுவாக்குடி மலைவாழ் மக்கள் அறிவித்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குரங்கணியின் மேல்பகுதியில் உள்ளது முதுவாக்குடி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல் ஸ்டேஷன் மலை கிராமங்கள். கடல்மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிஐ! April 28, 2019

பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில், திருநாவுக்கரசு,...

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவு! April 26, 2019

ns7.tv தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்...

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு? April 26, 2019

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 29-ம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் ஒன்பது லட்சத்து, 97 ஆயிரம் பேர் எழுதியுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த 16ஆம் தேதி முடிவடைந்த நிலையில்,...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தை நெருங்கும் புயல்! April 26, 2019

50 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தை நோக்கி புயல் வர உள்ளதாக, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.  வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து புயலாக உருவெடுக்கும் என்பதால், தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் மாதத்தில்...

நெருங்கும் ஃபானி: புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! April 26, 2019

ns7.tv ஃபானி புயல் எதிரொலியாக புதுச்சேரியில் விடுப்பு எடுத்த அரசு அதிகாரிகள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.  வங்க கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஃபானி புயலாக மாறி வரும் 30ம் தேதி புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், புயலை எதிர்கொள்வது தொடர்பாக...

மரத்தின் உச்சியில் விமானத்தை தரையிறக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த விமானி! April 26, 2019

விமானத்தின் எஞ்சின் பழுதடைந்த நிலையில் உயரமான மரத்தின் மீது மோதச்செய்து விமானி ஒருவர் உயிர்பிழைத்த அதிசயம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் உள்ள Mccall எனும் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் கிரிகோரி (வயது 79). இவர் கடந்த திங்கட்கிழமை இரவில் தன்னுடைய  Piper Cub PA-18 என்ற ஒற்றை இஞ்சின் கொண்ட சிறிய ரக விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது விமானத்தின்...

எந்த சம்பந்தமும் இல்லை

source F B தவ்ஹீத் ஜமாஅத் April 23 at 7:06 PM · இலங்கை குண்டு வெடிப்பில் சந்தேகிக்கப்படும் NTJ விற்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை பத்திரிக்கையாளர் சந்திப்பு - சென்னை - 23-04-2019 ஏ.கே. அப்துல் ரஹீம் (மாநிலத் துணைப் பொதுச்செயலாளர், TN...

வியாழன், 25 ஏப்ரல், 2019

தூத்துக்குடியில் வணிகர் சங்கங்களின் சுதேசி பொருளாதார பிரகடன மாநாடு! April 25, 2019

அரசியல் வாதிகளின்  பணப்பட்டுவாடா தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருவதாகவும் தேர்தல் அதிகாரிகள் வியாபாரிகளை கொடுமைப்படுத்துவதாகவும் இந்தப் போக்கை தேர்தல் அதிகாரிகள் கைவிட வேண்டும் என்றும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வியாபாரிகளிடம் திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் வரும் மே 5ம் தேதி தூத்துக்குடியில் வணிகர் சங்கங்களின் 36 மாநில மாநாடு சுதேசி பொருளாதார பிரகடன மாநாடாக நடைபெற உள்ளதாகவும் இதில் திரளான வணிகர்கள் பங்கேற்க உள்ளதாகவும்...

நெல் கொள்முதல் செய்யாமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்! April 25, 2019

பொள்ளாச்சி அருகே, நெல்லை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், சுமார் 1500 டன் நெல் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  கோவை மாவட்டம் ஆனைமலையில், தேர்தல் முடிந்த நிலையில் நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 23ம் தேதி முதல் நெல்லை கொள்முதல் செய்ய ஆட்சியர் ராசாமணி  உத்தரவிட்டிருந்தார்....

சமூக வலைதள பிரச்சனை சாலைமறியலில் வந்து நின்றது ! April 25, 2019

ஒரு குறிப்பிட்ட சமுதாய பெண்கள் குறித்து இழிவாக பேசி சமூக வலைதளத்தில் பதிவிட்டவர்களை கைது செய்யக் கோரி நீடாமங்கலத்தில் சாலைமறியல் நடைபெற்றது.  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கிராமத்தில் ஒரு சமுதாயத்தின் பெண்கள் குறித்து இழிவாக பேசி சமூகவலைதளத்தில் சிலர் பதிவிட்டனர். இதனால் அங்கு பெரும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. இதனிடையே தவறாக பதிவிட்டவர்களை கைது...

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் குளறுபடி; மாணவர்கள் குழப்பம்! April 25, 2019

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்காக கொடுக்கப்பட்ட ஹால் டிக்கெட்களில் தேர்வு நடைபெறும் ஊர் வேறாகவும், தேர்வு மையம் வேறாகவும் இருப்பதாக பல மாணவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். இதனிடையே, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ப்ரியதர்ஷனி என்ற மாணவி நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை...