செவ்வாய், 30 ஏப்ரல், 2019

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! April 30, 2019

Image
மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது நிகழ்ந்த தொடர்குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
மேலும், மதுரை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூரை சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் பாஸ்கரன் எனும் இருவர் கடிதம் மூலம் மதுரை விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்திருந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெருங்குடி போலீசார் சந்திரசேகரன் மற்றும் பாஸ்கரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மீதும் ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்காமல் தடுப்பதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது

source ns7.tv