செவ்வாய், 30 ஏப்ரல், 2019

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் பாதுகாப்பு படை வீரர்! April 29, 2019

Image
எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவை குறை கூறி வீடியோ வெளியிட்ட தேஜ் பகதூர் யாதவ், வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாதி , பகுஜன் சமாஜ் கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.  
எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து குறை கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதால் பாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர் யாதவ், 2017ம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.முன்னாள் பாதுகாப்பு படை வீரரான தேஜ் பகதூர் யாதவ், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். 
வாரணாசி தொகுதிக்கு ஏழாவது கட்டமாக மே 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி, கடந்த 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் சமாஜ்வாதி சார்பில் வாரணாசி தொகுதியில் அறிவிக்கப்பட்ட ஷாலினி யாதவ் என்ற வேட்பாளர் திடீரென நீக்கப்பட்டு, தேஜ் பகதூர் யாதவை தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அக்கட்சி அறிவித்துள்ளது.

source ns7.tv

Related Posts: