சனி, 20 ஏப்ரல், 2019

தமிழகத்தில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு! April 20, 2019

Image
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 
அடுத்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெயிலின் அளவு தற்போது இருப்பதை விடவும் 2 டிகிரி செல்சியஸ் குறையும் என்றும் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source ns7.tv