வியாழன், 25 ஏப்ரல், 2019

சமூக வலைதள பிரச்சனை சாலைமறியலில் வந்து நின்றது ! April 25, 2019

Image
ஒரு குறிப்பிட்ட சமுதாய பெண்கள் குறித்து இழிவாக பேசி சமூக வலைதளத்தில் பதிவிட்டவர்களை கைது செய்யக் கோரி நீடாமங்கலத்தில் சாலைமறியல் நடைபெற்றது. 
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கிராமத்தில் ஒரு சமுதாயத்தின் பெண்கள் குறித்து இழிவாக பேசி சமூகவலைதளத்தில் சிலர் பதிவிட்டனர். இதனால் அங்கு பெரும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. இதனிடையே தவறாக பதிவிட்டவர்களை கைது செய்யக்கோரி திருவாரூர் மாவட்ட நீடாமங்கலத்தில் ஒரு சமூதாயத்தினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். அதனால், அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

source ns7.tv