செவ்வாய், 30 ஏப்ரல், 2019

15,600 ஆண்டுகள் பழமையான மனிதரின் காலடித்தடம் கண்டுபிடிப்பு! April 29, 2019

Image
சிலி நாட்டின்  தெற்கு பகுதியில் கண்டறியப்பட்ட மனிதரின் காலடித்தடம் 15,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள சிலி நாட்டின் தென்பகுதியில் உள்ள Osornoவில் மனிதரின் கால்தடம் ஒன்றை கடந்த 2010ம் ஆண்டில் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ஒருவர் கண்டறிந்தார்.
இது ஏதேனும் மிருகத்தின் கால்தடமாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில் இது தொடர்பான ஆராய்ச்சியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 9 ஆண்டுகளாக ஈடுபட்டிருந்தனர்.
இந்த ஆராய்ச்சியினை தலைமையேற்று நடத்திய Karen Moreno என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் இது மனிதரின் கால்தடம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இது 15,600 ஆண்டுகள் பழமையானது என அவர் உறுதியாக கூறியுள்ளார்.
கால்தடம் கண்டறியப்பட்ட பகுதியில் இருந்து யானைகள் உள்ளிட்ட காட்டு மிருகங்களின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறிய Karen Moreno, இது மனிதர்களின் இருப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் அமெரிக்காவில் 12,000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் இருந்ததற்கான முதல் ஆதாரமாக இது அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தென் அமெரிக்காவில் ஆதி மனிதர்களின் இருப்பை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் கிடைக்கக்கூடிய பகுதிகளை தற்போது ஆராந்து வருவதாகவும் Moreno கூறினார்.