வெள்ளி, 26 ஏப்ரல், 2019

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தை நெருங்கும் புயல்! April 26, 2019

Image
50 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தை நோக்கி புயல் வர உள்ளதாக, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து புயலாக உருவெடுக்கும் என்பதால், தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தை நோக்கி புயல் வர உள்ளதாக, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், பொதுவாக ஏப்ரல் மாத இறுதியில் உருவாகும் புயல் பர்மாவையே தாக்கியிருக்கிறது என்றும், முன்னதாக கடந்த 1966ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் உருவான புயல் மட்டுமே தமிழகத்தை தாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் ஏப்ரல் இறுதியில் உருவாகும் புயல் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளதாகவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இன்னும் 24 மணி நேரத்திற்குப் பிறகே எந்தெந்த மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை கணிக்க முடியும் எனவும் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

source ns7.tv