வெள்ளி, 26 ஏப்ரல், 2019

மரத்தின் உச்சியில் விமானத்தை தரையிறக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த விமானி! April 26, 2019

Image
விமானத்தின் எஞ்சின் பழுதடைந்த நிலையில் உயரமான மரத்தின் மீது மோதச்செய்து விமானி ஒருவர் உயிர்பிழைத்த அதிசயம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் உள்ள Mccall எனும் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் கிரிகோரி (வயது 79). இவர் கடந்த திங்கட்கிழமை இரவில் தன்னுடைய  Piper Cub PA-18 என்ற ஒற்றை இஞ்சின் கொண்ட சிறிய ரக விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது விமானத்தின் எஞ்சின் திடீரென்று செயலிழந்தது.
அவரது விமானம் உயரமான மரங்கள் மிகுந்த பகுதியில் கீழே விழுந்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக அவரது விமானம் 60 அடி உயர மரத்தின் உச்சிப்பகுதியில் சிக்கிக்கொண்டது.
சுதாரித்துக்கொண்ட விமானி ஜான் கிரிகோரி, 911 என்ற அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தனது நிலையை எடுத்துரைத்துள்ளார். அதன் பேரில் தீயணைப்புத்துறை வீரர்கள் அங்கு வந்தனர்.
உயரமான மரத்தில் விமானத்தில் சிக்கிக்கொண்ட விமானியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு கீழே கொண்டுவந்தனர். இருப்பினும் அவரது விமானம் மரத்தின் கிளையில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு உள்ளது. அதனை எவ்வாறு மீட்பது என்று அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.
source ns7.tv