ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

உருவானது ஃபானி புயல்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்! April 27, 2019

Image
வங்கக் கடலில் ஃபானி புயல் உருவாகியுள்ளதையடுத்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
புயல் எச்சரிக்கையை அடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்தனர். ஏற்கெனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர். புயல் எச்சரிக்கையை தொடர்ந்து முட்டம், குளச்சல், கடியப்பட்டினம், தேங்காய்பட்டினம், கன்னியாகுமரி மீனவர்கள் மூன்றாவது நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 
ஃபானி புயல் முன்னெச்சரிக்கையையொட்டி கடலூர் மாவட்டம் மரக்காணம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. வங்கக் கடலில் தற்போது ஃபானி புயல் உருவாகி உள்ளது. இதையடுத்து, மீனவர்கள் யாரும் கட்டு மரம், பைபர் படகு போன்றவற்றை பயன்படுத்தி மீன் பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம் என தமிழக அரசு அறிவித்தது. இதனால் மரக்காணம் பகுதி மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு செல்லவில்லை.
source ns7.tv