செவ்வாய், 30 ஏப்ரல், 2019

தமிழகத்தின் சில பகுதிகளில் கோடை மழை...! பொதுமக்கள் உற்சாகம்! April 30, 2019

Image
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் நேற்று கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. 
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஆங்காங்கே தலைகாட்டும் மழையால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜாபுரம், மல்லி, கிருஷ்ணன்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால், ஒரு சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாயினர்.
இதேபோன்று  ஈரோடு மாவட்டம் பெருந்துறை, சென்னிமலை, கொடுமுடி, பவானி, கோபிச்செட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

Related Posts: