வியாழன், 25 ஏப்ரல், 2019

நெல் கொள்முதல் செய்யாமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்! April 25, 2019

Image
பொள்ளாச்சி அருகே, நெல்லை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், சுமார் 1500 டன் நெல் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 
கோவை மாவட்டம் ஆனைமலையில், தேர்தல் முடிந்த நிலையில் நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 23ம் தேதி முதல் நெல்லை கொள்முதல் செய்ய ஆட்சியர் ராசாமணி  உத்தரவிட்டிருந்தார். இதனால், விவசாயிகள் பலரும் ஆனைமலைக்கு நெல் கொண்டு வந்து கொட்டிய நிலையில், அவற்றை கொள்முதல் செய்ய அதிகாரிகள் யாரும் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், நெல் குவியல் மழையில் நனைந்து நாசமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள விவசாயிகள், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்
source ns7.tv