வியாழன், 25 ஏப்ரல், 2019

நெல் கொள்முதல் செய்யாமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்! April 25, 2019

Image
பொள்ளாச்சி அருகே, நெல்லை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், சுமார் 1500 டன் நெல் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 
கோவை மாவட்டம் ஆனைமலையில், தேர்தல் முடிந்த நிலையில் நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 23ம் தேதி முதல் நெல்லை கொள்முதல் செய்ய ஆட்சியர் ராசாமணி  உத்தரவிட்டிருந்தார். இதனால், விவசாயிகள் பலரும் ஆனைமலைக்கு நெல் கொண்டு வந்து கொட்டிய நிலையில், அவற்றை கொள்முதல் செய்ய அதிகாரிகள் யாரும் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், நெல் குவியல் மழையில் நனைந்து நாசமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள விவசாயிகள், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்
source ns7.tv

Related Posts:

  • மிஃராஜ் பயணம் நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணம் மிஃராஜ் பயணம் அவர்களின்பிறப்பு மக்கா வெற்றி மற்றும் அவர்கள் சந்தித்த போர்கள் ஆகியவரலாற்றுச் சம்பவங்கள் நினைவூ கூறும… Read More
  • Indonesian expatriates set fire Monday 10 June 2013 JEDDAH: Rioting Indonesian expatriates set fire to a part of their consulate in Jeddah's Rehab district on Sunday in an att… Read More
  • Islam Read More
  • உங்கள் வீட்டில் கொசு தொல்லையா.?அப்ப இதை படிங்க..!கொசு ஒரு பிரச்சனையா?இது 100% வேலை செய்யும்...!உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்… Read More
  • அழைப்புப் பணி ஆட்டோ ஓட்டுனர்களின் அசத்தலான அழைப்புப் பணி! பெங்களூருவில் உள்ள "சலாம் சென்டர்" என்ற அமைப்பின் அணுகுமுறை நிச்சயம் புதுமையானது, புரட்சிகரமானது. இஸ்லாம… Read More