வியாழன், 25 ஏப்ரல், 2019

தூத்துக்குடியில் வணிகர் சங்கங்களின் சுதேசி பொருளாதார பிரகடன மாநாடு! April 25, 2019

அரசியல் வாதிகளின்  பணப்பட்டுவாடா தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருவதாகவும் தேர்தல் அதிகாரிகள் வியாபாரிகளை கொடுமைப்படுத்துவதாகவும் இந்தப் போக்கை தேர்தல் அதிகாரிகள் கைவிட வேண்டும் என்றும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வியாபாரிகளிடம் திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் வரும் மே 5ம் தேதி தூத்துக்குடியில் வணிகர் சங்கங்களின் 36 மாநில மாநாடு சுதேசி பொருளாதார பிரகடன மாநாடாக நடைபெற உள்ளதாகவும் இதில் திரளான வணிகர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார் 
 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகிருஷ்ண பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்ட விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் 
செய்தியாளர்களிடம் பேசுகையில் வரும் மே 5ம் தேதி தூத்துக்குடியில் வணிகர் சங்கங்களின் 36 மாநில  மாநாடு சுதேசி பொருளாதார பிரகடன மாநாடாக நடைபெற உள்ளதாகவும் இதில் திரளான வணிகர்கள் 
தங்கள் கடைகளை  மூடி பங்கேற்க உள்ளார்கள்.

அரசியல் வாதிகளின்  பணப்பட்டுவாடா தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருவதாகவும் தேர்தல் அதிகாரிகள் வியாபாரிகளை கொடுமைப்படுத்துவதாகவும் இந்தப் போக்கை தேர்தல் அதிகாரிகள் கைவிட வேண்டும் என்றும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வியாபாரிகளிடம் திரும்ப கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதாகவும் தேர்தலில் யார் வெற்றி பெற்று வந்தாலும் தங்களின் உரிமைகளை காப்பாற்ற மாட்டார்கள் என்றும் உரிமைகளை காட்டிக் கொடுப்பார்கள் சில்லரை வணிகம் உள்நாட்டின் வர்த்தகம் விவசாயத்தை அழிப்பது தான் இவர்களின் வேலை என்றும் நமது உணர்வுகளை மதிக்க மாட்டார்கள் என்றும் நமது உரிமைகளை அந்நியர்களிடம் காட்டிக் கொடுப்பார்கள் என்றும் சுதேசி பொருளாதாரம் மட்டுமே வலுவான ஆயுதம் என்றும் நம் நாட்டுப் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று மக்களும் வியாபாரிகளும் முன்வந்தால் எத்தனை தலைவர்கள் வந்தாலும் எந்த திட்டம் போட்டாலும் அது முறியடிக்கப்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் தானாகவே  வெளிநாட்டுக்கு ஓடிவிடும் அதற்கு நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என அவர்  தெரிவித்தார்.

source ns7.tv