திங்கள், 29 ஏப்ரல், 2019

மக்களவைத் தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்! April 29, 2019

ns7.tv
Image
நான்காம் கட்ட மக்களவை தேர்தலையொட்டி, மகாராஷ்டிரா உள்பட 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளில், இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல், 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு உட்பட்ட 72 தொகுதிகளுக்கு, இன்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. நான்காம் கட்டத் தேர்தலில், 12 கோடியே 79 லட்சம் பேர், வாக்களிக்க உள்ளனர். 1 லட்சத்து 40 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் 17 தொகுதிகளுக்கும், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 13 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா 6 தொகுதிகளிலும், பீகாரில் ஐந்து தொகுதிகளிலும், ஜார்க்கண்டில் மூன்று தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகளில், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 
கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில், இவற்றில் 45 தொகுதிகளை பாஜக கைப்பற்றி இருந்தது. மும்பை தொகுதியில் நடிகை ஊர்மிளா மும்பை வடமத்தியில் பூனம் மகாஜன், உத்தரபிரதேச மாநிலம் கன்னாஜ் தொகுதியில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகனும் காங்கிரஸ் வேட்பாளருமான வைபவ் ஜோத்பூரிலும், மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் நடிகை மூன்மூன்சென் ஆகியோரும் களத்தில் உள்ளனர். இதுதவிர ஒடிசாவில் உள்ள 42 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.