செவ்வாய், 30 ஏப்ரல், 2019

ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்... மத்திய அரசு நிதி ஒதுக்கீடு! April 30, 2019

Image
ஃபானி புயலால் நேரிடும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான வாய்ப்புள்ள தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு 1086 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. 
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபானி புயல், ஆந்திரப்பிரதேசம், ஒடிஷா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் தலைமையில் கூடிய தேசிய நெருக்கடி மேலாண்மை குழு, ஃபானி புயலால் பாதிப்புகளை சந்திக்க வாய்ப்புள்ள மாநிலங்களுக்கு முன்கூட்டியே நிதி உதவி அளிக்க முடிவு செய்யப்பட்டது. 
இதனையடுத்து, தமிழகத்திற்கு 309.37 கோடி ரூபாயும், ஆந்திராவிற்கு 200 கோடி ரூபாயும், ஒடிசாவுக்கு 340 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்திற்கு 235 கோடி ரூபாயும் மத்தய அரசு நிதி உதவி அளித்துள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில், இந்த நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. 

source ns7.tv

Related Posts: