ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிஐ! April 28, 2019

Image
பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது. 
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் உட்பட 7 பேர் மீது, 5 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளது. 
பாலியல் வன்முறை மற்றும் நகைப் பறிப்பு தொடர்பாக இரு வழக்குகளை அவர்கள் மீது சிபிஐ பதிவு செய்துள்ளது.
source ns7.tv