ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

தமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரை! April 21, 2019

Image
தமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ பரிந்துரைத்துள்ளார். 
இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு மற்றும் கள்ள ஓட்டு போடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 8 வாக்குச்சாவடி மையங்களில் மறு வாக்குப்பதிவு நடத்தவேண்டும் என தெரிவித்தார். 
மேலும், திருவள்ளூர், கடலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தலா ஒரு வாக்குச்சாவடி என மொத்தம் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். 
source ns7.tv