சனி, 13 ஏப்ரல், 2019

பழைய பிரியாணியை சுட வைத்து சாப்பிட்ட 5 வயது சிறுமி உயிரிழப்பு! April 13, 2019

Image
அரக்கோணம் அருகே பழைய பிரியாணியை சுடவைத்து சாப்பிட்ட 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
அரக்கோணம் அடுத்த தண்டலம் புது காலனி பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்ற கூலி தொழிலாளி உறவினர் அளித்த பிரியாணியை ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் காலை சுட வைத்து தனது 4 குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் குழந்தைகள் நால்வருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டவே, 4 பேரும் அரக்கோணம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். 
அதில் கோபிகா என்ற 5 வயது சிறுமி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். 
மற்ற 3 குழந்தைகளுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
source ns7.tv