திங்கள், 29 ஏப்ரல், 2019

அதிதீவிர புயலாக மாறவுள்ள ஃபானி புயல்...! April 29, 2019

Image
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் அதிதீவிர புயலாக மாறவுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.   
வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 890 கிலோ மீட்டர் தொலைவில், ஃபானி புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மேலும் வலுவடைந்து அதி தீவிர புயலாக மாறும், என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில், வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. ஏப்ரல் 30 மற்றும் மே ஒன்றாம் தேதிகளில், வட தமிழகம் - தென் ஆந்திர கடற்கரைக்கு 300 கிலோ மீட்டர் அருகில், கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
வட தமிழகத்தை நெருங்கும் வேளையில், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறிய வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. புயல் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்தால், தமிழகத்தில் வெப்பநிலை உயரும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
source ns7.tv