திங்கள், 8 அக்டோபர், 2018

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம் October 7, 2018

Image

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மூன்று நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஒடிசா நோக்கி செல்வதாக கூறினார். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த இரு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான சூழல் உருவாகியுள்ளதாக கூறிய பாலசந்திரன், மினிக்காய் தீவில் நிலைகொண்டுள்ள தாழ்வு மண்டலம் புயலாக மாறவுள்ளதால் அரபிக்கடல் பகுதிக்கு இன்று முதல் 12-ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார்.

Related Posts:

  • கொலை நகரமான தலைநகரம்..! கொலை நகரமான தலைநகரம்..! சென்னையில் 24 மணி நேரத்தில் 6 பெண்கள் படுகொலைசென்னை ராயபேட்டையில் 4 பெண்களும், நுங்கம்பாக்கத்தில் ஒரு பெண்ணும், வடசென்னையில… Read More
  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு: சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ருசிக்க மட்டும் சுவையானதல்ல, இதயத்தின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும். இதில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்பொருட்க… Read More
  • உலகின் மிக பெரிய இஃப்தார் நிகழ்வு அல்-ஹரம் மதீனா இதற்கு சாட்சியம் அளிக்கிறது. தினமும் ஏறத்தாள மூன்று இலட்சம் நோன்பாளிகள் அமர வசதி செய்யப்படுகிறது.இஃப்தாரில் நுகரப்படும்… Read More
  • அம்மான் பச்சரிசி (Euphorbia hirta) அம்மான் பச்சரிசிச் செடியை நன்கு கழுவி நீர் விட்டு அரைத்து 20 கிராம் பாலில் கலக்கி, தினம் இருவேளை பருகி வர தாய்மார்களுக்குப் பால் சுரக்கும். முக… Read More
  • செம்பருத்திப் பூ இயற்கையின் அரிய படைப்புகளில் இந்த பூக்கள்தான் எத்தனை அழகு... நறுமணம் கொண்ட இவை கண்களுக்கு விருந்தாக மட்டுமல்ல... மருந்தாகவும் பயன்படுகின்றன. வீட்… Read More