திங்கள், 11 பிப்ரவரி, 2019

லக்னோவில் இன்று நடைபெறும் பரப்புரையில் பங்கேற்கும் பிரியங்கா காந்தி February 11, 2019

Image
காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி லக்னோவில் இன்று நடைபெறும் பரப்புரையில் பங்கேற்கிறார். 

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையை தொடங்கியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் கட்சியை பலப்படுத்தும் விதமாக கிழக்கு உத்தரபிரதேசத்தின் கட்சி பொறுப்பாளராகவும், தேசிய பொதுச்செயலாளராகவும் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். இதையடுத்து, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று நடைபெறும் சாலை பரப்புரையில் அவர் பங்கேற்கிறார். 

இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். தேசிய பொதுச்செயலாளராக பிரியங்கா பொறுப்பேற்ற பின் முதல் முறையாக பரப்புரை செய்ய உள்ளதால், லக்னோ நகரின் பல இடங்களில் காங்கிரஸ் சார்பில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

source ns7.tv