Home »
» இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு! September 6, 2018
ஓரினச்சேர்க்கை குற்றம் என அறிவிக்கும் இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (06.09.2018) தீர்ப்பு வழங்குகிறது.பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட குற்றவியல் சட்டப்பிரிவு 377-ன் படி இயற்கை நியதிக்கு மாறான வகையில் உடலுறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய செயலாக கருதப்படுகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இந்திய தண்டனை சட்ட பிரிவு 377-ஐ ரத்து செய்து, கடந்த 2009ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பிற்கு எதிராக கடந்த 2013ம் ஆண்டு தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததோடு, ஓரினசேர்க்கை உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான உடலுறவு விஷயங்களுக்கு தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு 377ஐ மீண்டும் உறுதி செய்தது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது
Related Posts:
புத்தகப்பையோடு வில் மற்றும் அம்பை கொண்டு செல்லும் மாணவர்கள்! November 12, 2018
ஜார்கண்ட்டில் நக்ஸல்களிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் நோக்கில், பள்ளி செல்லும் சிறுவர் - சிறுமியர் புத்தகப் பையோடு, வில் - அம்பையும் … Read More
சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் 18 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தேர்தல்! November 12, 2018
சத்தீஸ்கரில் நக்சலைட் நிறைந்த பகுதிகளில், இன்று முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 90 தொகுதிக… Read More
சர்கார் பாணியில் 2008ம் ஆண்டு நடந்த தேர்தல்; தீர்ப்பு என்ன தெரியுமா? November 11, 2018
சர்கார் படம் பல சர்ச்சைகளையும் தாண்டி ஒருவருடைய ஓட்டை கள்ள ஓட்டு போட்டுவிட்டால் தேர்தல் விதிமுறைகளில் உள்ள 49-பி பிரிவை பயன்படுத்தி தன… Read More
ரெட் அலர்ட் எப்போது விடுக்கப்படுகிறது? November 11, 2018
தமிழகத்திற்கு வரும் 15ம் தேதி ரெட் அலர்ட் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வரும் 15ம் தேதி அனேக இடங்களில் மிக அதிகம… Read More
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தியது : ரகுராம் ராஜன் November 11, 2018
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்… Read More