வெள்ளி, 10 ஜனவரி, 2020

ஆர்எஸ்எஸ் கொள்கைகளை பாஜக நிறைவேற்றி வருகிறது: கி.வீரமணி

Image
ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்து நாட்டை உருவாக்குவதற்கு முன்பாக, நித்தியானந்தா கைலாசா என்னும் இந்து நாட்டை உருவாக்கி விட்டதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். 
திருப்பூரில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதன் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். ஆர்எஸ்எஸ் கொள்கைகளை பாஜக நிறைவேற்றி வருவதாகவும், குடியுரிமை திருத்தச் சட்டம், நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கை என அனைத்தையும் திணித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். 
ஆர்எஸ்எஸ் தலைவர், இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்கள் எனவும், இதை இந்து நாடாக்க வேண்டும் எனவும் கூறி வருவதாக குறிப்பிட்ட வீரமணி, ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு முன்பாக இந்தியாவில் இருந்து தப்பிச்சென்ற நித்தியானந்தா,  பாஜக அரசின் தயவோடு கைலாசா எனும் நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறினார். 
credit ns7.tv