ஞாயிறு, 12 ஜனவரி, 2020

ஜேஎன்யு விவகாரத்தில் திமுக உறுதி!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு திமுக துணை நிற்கும் என அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்குள் சமீபத்தில் புகுந்த கும்பல் மாணவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இச்சம்பவத்தை கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
Udhayanidhi Stalin
போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். தாக்குதல் நடந்த இடத்தையும் அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, மாணவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், போலீசாரின் துணையுடன் தாக்குதல் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். 
credit ns7.tv