செவ்வாய், 14 ஜனவரி, 2020

எனது கைது நடவடிக்கை, நெல்லை தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை - நெல்லை கண்ணன்

Image
தமது கைது நடவடிக்கை, நெல்லை தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை என இலக்கியவாதி நெல்லை கண்ணன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கைதாகி சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலக்கியவாதி நெல்லை கண்ணன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தினமும் காலை, மாலை இருவேளை மேலப்பாளையம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனை தொடர்ந்து நெல்லை மேலப்பாளையம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, நெல்லை தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை என தெரிவித்தார். 

credit ns7.tv