செவ்வாய், 17 மார்ச், 2020

CAAவுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் கொண்டு வர வாய்ப்பே இல்லை: மு.க.ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் கொண்டு வர வாய்ப்பே இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
சென்னை வண்ணாரப்பேட்டையில் 32 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமியர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாநிலங்களவையில் அதிமுக கூட்டணி எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்த சட்டம் வந்திருக்காது என்றார்.
MKStalin
இஸ்லாமியர்கள் தங்கள் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஆனால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். 
credit ns7tv

Related Posts: