Home »
» நிர்மலா தேவி விவகாரத்தில் இரண்டாம் கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி! September 7, 2018
மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் இரண்டாம் கட்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீசார் இன்று தாக்கல் செய்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றிய நிர்மலா தேவி, அந்த கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக சர்ச்சை எழுந்தது. இந்த வழக்கில் நிர்மலாதேவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.சிபிசிஐடி விசாரணையில் உள்ள இந்த வழக்கில் முதற்கட்ட குற்றப் பத்திரிக்கை கடந்த ஜூலை 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி உள்ளிட்டோர் பெயர்கள் சேர்க்கப்பட்டன.இந்நிலையில், 2ம் கட்ட குற்றப்பத்திரிக்கையை விருதுநகர் நீதிமன்றத்தில் டி.எஸ்பி கருப்பையா, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திலகேஸ்வரி முன்பு தாக்கல் செய்தார். 200 பக்கங்கள் கொண்ட 2வது கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
Related Posts:
நீட் ஒதுக்கீட்டில் அரசு பள்ளிகளுக்கு 0.5% மட்டும் தானா? August 24, 2017
தமிழகத்தில் 12ம் வகுப்பு எழுதியவர்கள் - 8,93,262 பேர்தேர்ச்சி பெற்றவர்கள் - 8,22,838 பேர்இதில் மருத்துவம் படிக்கத் தேவையான அறிவியல் பா… Read More
3 மாநிலங்களை கலவர பூமியாக்கிய சாமியார் குர்மித் ராம் ரகீம்..!! August 25, 2017
பாலியல் வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ அமைப்பின் சாமியார் குர்மித் ராம் ரஹீம் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், பஞ்சா… Read More
ட்விட்டரை வாங்கி ட்ரம்பை வெளியே துரத்தக் காத்திருக்கும் முன்னாள் CIA உளவாளி! August 24, 2017
அமெரிக்காவின் முன்னாள் ரகசிய சி.ஐ.ஏ அதிகரி ஒருவர், டொனால்ட் ட்ரம்பை வெளியேற்றுவதற்காக ட்விட்டரை விலைக்கு வாங்க நிதி திரட்டிக்கொண்டிருக… Read More
200 ரூபாய் நோட்டில் இருக்கும் அந்த சின்னம் என்னது? August 25, 2017
இந்தியாவில் முதன்முறையாக 200 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 8, 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு மிகக்கடுமையா… Read More
177 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலத்தைப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க கோரிக்கை August 25, 2017
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் 177 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலத்தைப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துப் பராமரிக்க வேண்டும் என்க… Read More