வெள்ளி, 7 செப்டம்பர், 2018

நிர்மலா தேவி விவகாரத்தில் இரண்டாம் கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி! September 7, 2018

Image

மாணவிகளை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் இரண்டாம் கட்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீசார் இன்று தாக்கல் செய்தனர். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றிய நிர்மலா தேவி, அந்த கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு திசை திருப்ப முயன்றதாக சர்ச்சை எழுந்தது. இந்த வழக்கில் நிர்மலாதேவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சிபிசிஐடி விசாரணையில் உள்ள இந்த வழக்கில் முதற்கட்ட குற்றப் பத்திரிக்கை கடந்த ஜூலை 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி உள்ளிட்டோர் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

இந்நிலையில், 2ம் கட்ட குற்றப்பத்திரிக்கையை விருதுநகர் நீதிமன்றத்தில் டி.எஸ்பி கருப்பையா, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திலகேஸ்வரி முன்பு தாக்கல் செய்தார். 200 பக்கங்கள் கொண்ட 2வது கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  

Related Posts:

  • Hadis மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (தொழுதுகொண்டிருக்கையில் இதோ) இந்த இடத்தில் எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சியிலிருந்து) பின்… Read More
  • முகமது அலி அவர்களின் மிக அழகிய பேட்டி! ------------------------------------------------------------------------- கேள்வி: உங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளாமல் அனைவரிடமும் சகஜமாக பழகுகிறீர… Read More
  • இந்தி வெறி மோடி அரசு. தமிழ்நாட்டில் யாருக்காக இந்தியில் தொடர்ந்து விளம்பரங்களை வெளியிடுகிறது இந்தீய அரசு.தமிழ்நாட்டில் உள்ள பாஜககாரர்கள் அனைவரும் இந்தியில் … Read More
  • ஸ்மார்ட் கார்டு ஸ்மார்ட் கார்டுக்கு யாரெல்லாம் இந்த பாரம் கொடுத்திட்டீங்க? குடுக்காதவர்கள் சீக்கிரமா உங்க நியாயவிலை கடையில் பாரம் வாங்கி நிரப்பி கொடுக்கவ… Read More
  • நாவல் பழத்தின் மருத்துவக் குணம் நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால்… Read More