வியாழன், 31 அக்டோபர், 2019

இரண்டு யூனியன் பிரதேசங்களானது ஜம்மு-காஷ்மீர்...!

Image
நாட்டின் மாநிலங்களில் ஒன்றாக இருந்த ஜம்மு- காஷ்மீர் நள்ளிரவு முதல் ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிந்தது. 
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு நீக்கியது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மத்திய அரசின் உத்தரவு சர்தார் வல்லபாய் பிறந்தநாளான இன்று அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
அதன்படி நள்ளிரவு முதல் ஜம்மு- காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக அதிகாரப்பூர்வமாக பிரிந்தது. மேலும், ஜம்மு- காஷ்மீருக்கு கிரிஷ் சந்திர முர்முவும், லடாக்கிற்கு ஆர்.கே. மாத்தூரும் துணை நிலை ஆளுநர்களாக இன்று பொறுப்பேற்கவுள்ளனர்.
credit ns7.tv