வியாழன், 31 அக்டோபர், 2019

உருவானது மகா புயல்: 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...!

Image
அரபி கடலில் உருவாகியுள்ள மகா புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
அரபி கடலில் ஏற்கனவே கியார் புயல் உருவாகியுள்ள நிலையில், புதிதாக மகா புயல் உருவாகி உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்,  மகா புயல் திருவனந்தபுரத்தில் இருந்து 320 கிலோ மீட்டர் வடமேற்கு திசையில் நிலைக்கொண்டுள்ளதாக கூறினார். 
லட்சத்தீவு பகுதியில் இருந்து 25 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் மகா புயல், தீவிர புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதால், மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 85 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என அவர் கூறினார். 
மேலும், புயல் காரணாக, தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் கூறினார். 

credit ns7.tv

Related Posts:

  • கனமான மலை Photograph - RS Suhaib முபட்டி - 30/05/2013 மாலை 4.15 மணி முதல் - 4.50 வரை - கனமான மலை - கொட்டி தீர்த்தது - சுமார் 4C ,மழை பதிவானது.  வெப்பத்தி… Read More
  • பாலியல் வன்கொடுமை உண்மை சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும்........குழி தோண்டி புதைக்கப்படும் உண்மைகள் ...சென்னை தி.நகரில் உள்ள சரவணா மற்றும் ஜெய… Read More
  • அம்மா திட்டத்தின் அம்மா  திட்டத்தின் கீழ், ஒவ்வரு கிராம நிர்வாக அலுவலகத்தில் ஏராளமாக விரைவு  பணிகள் நடைபெற்றது. குடும்ப அட்டையில்  பெயர் இணைதல் … Read More
  • RSS தீவிரவாத இயக்  தயவு செய்து எந்த கமெண்டும் வேண்டாம். ஷேர் செய்யுங்கள் முடிந்தஅளவுநண்பர்கள், உறவினர், அரசாங்க உயர்அதிகாரிகள், அரசியல் வாதிகள், காவல்துறை அதிகார… Read More
  • 10-ம் வகுப்பு தேர்வு முடிவு Majestic Matriculation School :-MKPatti a) B. Mohamed Yousu 463 (First Place) b) Infant Jesus School- Annavasal a) Anusiya - 482 b) Bharathi raja -… Read More