செவ்வாய், 15 அக்டோபர், 2019

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு...!

Image
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கு விசாரணையின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ சார்பாக சிறப்பு குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் 160 தொழில்நுட்பம் தொடர்பான ஆவணங்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்டு அதில் 100 ஆவணங்களுக்கு பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய ஏற்கனவே வழங்கப்பட்ட காலத்தை நீட்டித்து கூடுதல் கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என கேள்வி  எழுப்பினர். தொடர்ந்து வழக்கு விசாரணை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 10ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

credit ns7.tv