வியாழன், 31 அக்டோபர், 2019

5, 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வழிமுறைகள் வெளியீடு

Image
5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 
வரும் 2020ம் ஆண்டு ஏப்ரலில் பொதுத்தேர்வு நடத்துவதற்கு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட அளவில் 32 மாவட்டத்துக்கும் தனித்தனி தேர்வுக்குழுவை அமைத்து தொடக்கக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையிலான 8 பேர் கொண்ட தேர்வுக்குழு, மாவட்ட அளவில் பொதுத்தேர்வு நடத்தும் பணிகளை மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளும்,  8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளும் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
5-ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, ஆகிய 3 பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் எனவும், 8-ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

credit ns7.tv