செவ்வாய், 29 அக்டோபர், 2019

உயிருக்கு போராடும் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்!


Image
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் உயிருக்கு போராடுவதாக குடும்ப மருத்துவர் தெரிவித்துள்ளார்.
மூன்று முறை பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப் பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று Kot Lakhpat சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல்நிலை காரணமாக அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் கிடைத்து, லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே கடந்த சனிக்கிழமை நவாஸ் ஷெரிப்புக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் அவரின் நிலை சிறிது சிறிதாக மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் கூறினர்.
இதனிடையே 3வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை மேலும் மோசமடைந்திருப்பதாக அவரின் குடும்ப மருத்துவர் அத்னன் கான் தகவல் வெளியிட்டுள்ளார்.
69 வயதான நவாஸ் ஷெரிப் ‘பஞ்சாப் சிங்கம்’ என்றழைக்கப்படுகிறார். (பாகிஸ்தானில் பஞ்சாப் என்ற மாநிலம் உள்ளது). நவாஸின் சிறுநீரகம் மோசமடைந்ததன் காரணமாக ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்களின் அளவு ஆபத்தான முறையில் குறைந்திருப்பதாக மருத்துவர் அத்னன் கான் கூறியுள்ளார். ஒரே நாளில் பிளேட்லெட்களின் எண்ணிக்கை 45,000ல் இருந்து 25,000ஆக குறைந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. ஷெரிபுக்கு தொடர்ந்து அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சையில் மற்றொரு பிரதமர்: 
abbasi
நவாஸ் ஷெரீப்பை தொடர்ந்து ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்றொரு பாகிஸ்தான் பிரதமரான ஷாகித் ககான் அபாஸியின் (வயது 60) உடல்நிலையும் மோசமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது. Adalia சிறையில் அடைக்கப்பட்டிருந்த அபாஸி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

credit ns7.tv