ஞாயிறு, 27 அக்டோபர், 2019

மருத்துவர்களின் கோரிக்கையை அரசு உடனே ஏற்க வேண்டும்: டி.கே.ரங்கராஜன்

Image
மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்க அரசு முன்வராவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். 
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2-வது நாளாக நடைபெற்று வரும் அரசு மருத்துவர்களின் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.ரங்கராஜன், மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்றும், மருத்துவம் படிக்கவே அதிக செலவாகும் போது மருத்துவர்களுக்கு குறைந்த ஊதியம் தருவது அதிர்ச்சியளிக்கிறது என்றும் கூறினார். 
மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு அவர்களின் கோரிக்கையை உடனே ஏற்க வேண்டும் என்றும், இல்லாவிடில் அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

credit ns7.tv