வியாழன், 31 அக்டோபர், 2019

இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க ஆய்வு நிறுவனம்..!

Image
2050ம் ஆண்டுக்குள் வெள்ளத்தால் ஆண்டுதோறும் இந்தியாவில் சுமார் மூன்றரை கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என ஆய்வு ஒன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நடத்திய ஆய்வு ஒன்றில், பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியா, சீனா, வியட்நாம், வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய 6 ஆசிய நாடுகள் ஆண்டுதோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக இந்நாடுகளில் கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள், எவ்வித பாதுகாப்பும் இன்றி வசித்து வருவதாகவும், இதனால் மிகப்பெரிய அச்சுறுத்தலை இந்நாடுகள் சந்திக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் 2050க்குள் 23 கோடி பேரும், இந்தியாவில் மட்டும் மூன்றரை கோடி பேரும் வெள்ளத்தால் ஆண்டுதோறும் பாதிக்கப்படுவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
இதுபோன்ற பாதிப்புகளை தடுக்க வேண்டுமெனில் பருவநிலைக்கு ஏற்ப நகர கட்டமைப்புகளில் மாற்றம் செய்வது, கடலோர பாதுகாப்பை பலப்படுத்துவது, கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் போன்ற பசுமை வாயுக்கள் வெளியேற்றுவதை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

credit ns7.tv