ஞாயிறு, 13 அக்டோபர், 2019

ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலமாக பாலியல் தொல்லை... சாமியார் நித்யானந்தா மீது மேலும் ஒரு புகார்...


Image
சாமியார் நித்தியானந்தா பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாவது புதிது அல்ல. அந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார் நித்தியானந்தா.
நித்யானந்தா சிவனின் அவதாரம் எனக் தன்னை தானே கூறி கொள்பவர் சர்ச்சைகளை சுற்றி வலம் வருபவர் நடிகை ரஞ்சிதாவுடனான பாலியல் வீடியோ தொடங்கி, மதுரை ஆதீன விவகாரம், மேட்டூர் சிலையை கடத்தியதாக எழுந்த புகார் என பல சர்ச்சைகளில் சிக்கினார். இதோடு பூமியை 15 விநாடிகள் நிறுத்தப் போகிறேன், மேட்டூர் அணைக்கு அடியில் இருந்த சிவலிங்கத்தை தான் தான் வைத்துள்ளேன் என நம்பமுடியாத கூற்றுகளை கூறும் நித்யானந்தா தற்போது மேலும் ஒரு சிக்கலில் சிக்கியுள்ளார். 
 
ரஞ்சிதாவுடனான வீடியோ வெளியான போதே நித்யானந்தா ஆசிரமத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது அதே போன்றதொரு குற்றச்சாட்டு மீண்டும் எழுந்துள்ளது. இந்த முறை குற்றசாட்டை தெரிவித்திருப்பவர் கனடாவை சேர்ந்த முன்னாள் சிஷ்யை ஒருவர்... ஏற்கனவே நித்யானந்தா சிறுவர், சிறுமிகளை கொடுமைப்படுத்துகிறார் என குற்றம் சாட்டியிருந்த அவர் தற்போது, தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். 
பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த கனடா நாட்டை சேர்ந்த சாரா ஸ்டீபனி லாண்ட்ரி என்ற பெண் இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக பேஸ்புக் மெசஞ்சரில் நித்யானந்தா அனுப்பிய மெசேஜ்களையும் அவர் வெளியிட்டுள்ளார். சதாசிவா என்ற பெயரில் இருக்கும் அந்த ஐடியில் இருந்து அனுப்பபட்ட மெசேஜ்களை வெளியிட்டுள்ள சாரா, அது நித்யானந்தாவின் ஐடி என்றும் கூறியுள்ளார். 
சாரா வெளியிட்டுள்ள ஆதாரங்களில், அந்த சிஷ்யைக்கு முத்தம் கொடுப்பது, காதலை கூறுவது என மெசேஜ்கள் நிறைந்து காணப்படுகின்றன. தான் சிவன் என குறிப்பிட்டுள்ள நித்யானந்தா தனக்கு பார்வதியாக வர விருப்பமா என அந்த சிஷ்யையிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாலை, நள்ளிரவு என அனைத்து வேளைகளிலும் தனக்கு மெசேஜ் அனுப்பியதாகவும் அந்த சிஷ்யை தெரிவித்துள்ளார். அதோடு நில்லாமல் பேஸ்புக் மெசஞ்சரில் உள்ள nick name என்பதில் அந்த பெண்ணின் பெயரை சக்தி என நித்தியானந்தாவே  மாற்றியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
உனக்காக எனது கதவுகள் எப்போதும் திறந்து தான் இருக்கின்றன, நிச்சயமாக உனது எதிர்காலம் என்னோடு தான் என்பன போன்ற மெசேஜ்கள் அதில் கொட்டி கிடக்கின்றன. ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தவிக்கும் நித்யானந்தா மீதான இந்த குற்றச்சாட்டு மேலும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு நித்யானந்தா ஆசிரம பக்தைகள் பதிலளித்து வருகின்றனர். இது இந்துகளுக்கும், இந்துத்வாவிற்கும் எதிரான தாக்குதல் என நித்தியானந்தாவின் பெண் பக்தர்கள் தெரிவித்துள்ளனர். 
credit ns7.tv