வியாழன், 17 அக்டோபர், 2019

இந்தியாவில் குழந்தைகள் உயிரிழப்பு குறித்து யுனிசெப் வெளியிட்டுள்ள அதிர்ச்சிதரும் அறிக்கை...!

credit ns7.tv
Image
இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழப்பதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
News7 Tamil
யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கை:
➤இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. 
➤42 சதவீத குழந்தைகளே போதிய அளவில் உணவை பெறுகின்றனர்.
➤21 சதவீத குழந்தைகள் மட்டுமே போதிய அளவிலான பல்வேறு உணவுப் பொருட்களை பெறுகின்றனர்.
➤5 வயதுக்கு கீழுள்ள ஐந்து குழந்தைகளில், ஒரு குழந்தைக்கு வைட்டமின் 'ஏ' பற்றாக்குறை உள்ளது. 
வளர்ந்துவரும் நாடான இந்தியாவில் 69% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழக்கின்றனர் என்ற தகவல் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.