புதன், 16 அக்டோபர், 2019

ஜம்மு காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது!

Image
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். 
சிறப்பு அந்தஸ்து மீண்டும் அளிக்க வலியுறுத்தியும், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் போராட்டம் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் சகோதரி சுரையா, மகள் சாஃபியா உள்ளிட்ட பெண்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். 

credit ns7.tv