புதன், 16 அக்டோபர், 2019

நாளையுடன் முடிவுக்கு வருகிறது அயோத்தி வழக்கு!

Image
அயோத்தியில் உள்ள நிலம் குறித்த வழக்கு விசாரணை நாளையுடன் நிறைவடைவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தினசரி அடிப்படையில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நடத்தி வருகிறது. 
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை குறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதி ரஞ்சன் கோகாய், 39வது நாளாக இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றதாகத் தெரிவித்தார். 40வது நாள் விசாரணை நாளை நடைபெற உள்ள நிலையில், அத்துடன் விசாரணை நிறைவு பெறுவதாகவும் அவர் கூறினார். ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் 17ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளதால், அதற்கு முன்பாக இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. 

credit ns7.tv

Related Posts:

  • முஹ்யித்தீன் மவ்லிதில் அவ்லியாக்களின் பிடரிகளை மிதித்தவர் ?.  முஹ்யித்தின் மவ்லிதில் இடம் பெறும் மற்றொரு நச்சுக் கருத்து இது.  இதன் பொருள் பின் வருமாறு. … Read More
  • Hadis அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்நியப்)பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் எனஉங்களை நான் எச்சரிக்கிறேன்" என்று கூறினார்கள்.அப்போது அன்ச… Read More
  • தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தை அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடசென்னை மாவட்டம் MKB நகர் கிளை சார்பாக, தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவ… Read More
  • hadis அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொன் அல்லது வெள்ளிப் பாத்திரத்தில் (பானங்களைப்)பருகியவர், தமது வயிற்றில் மிடறு மிடறாக நரகநெருப்பையே வி… Read More
  • உண்மை செய்தியை பகிருங்கள் உரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள்உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்கார… Read More