செவ்வாய், 29 அக்டோபர், 2019

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன், இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது, குமரிக் கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளதாக தெரிவித்தார். 
அங்கு வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவி வருவதால், அது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் எனவும் அவர் கூறினார்.இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்ததாக தெரிவித்தார். 
மேலும் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். சென்னையை பொறுத்தவரை லேசானது முதல் மிதான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார். 
credit ns7.tv

Related Posts:

  • தனிமையில் இறையச்சம்தனிமையில் இறையச்சம் நெய்வேலி - கடலூர் (வடக்கு) மாவட்டம் - 16-01-2021) உரை : அ. சபீர் அலி எம்.ஐ.எஸ்.ஸி (மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ) … Read More
  • ஸஃபர் மாதம் பீடை மாதமா?ஸஃபர் மாதம் பீடை மாதமா? உரை:- ஹுஸைன் (இஸ்லாமிய கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்) நரகில் தள்ளும் பித்அத் - 13.09.2022 பாகம் - 20 https://youtu.be/F… Read More
  • மனித கருத்துகள் மார்க்கமாகுமா?மனித கருத்துகள் மார்க்கமாகுமா? கே.எம். அப்துந்நாஸிர் M.I.Sc (மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ) திட்டச்சேரி - நாகை மாவட்டம் - 28.08.2022 https://… Read More
  • இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - இஸ்லாம்தவ்ஹீத் ஜமாஅத் அல்லாத பயான் நிகழ்ச்சிகளில் ஏன் கலந்துக் கொள்வதில்லை? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) சேப்பாக்கம் - தென்சென்னை மாவட்டம் - 30-07-2022 பத… Read More
  • இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்முஸ்லிம் பெண்கள் விரும்பித்தான் ஹிஜாபை அணிகிறார்களா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) திருவாரூர் வடக்கு மாவட்டம் - 31-07-2022 பதிலளிப்பவர் : ஆர். அப்து… Read More