செவ்வாய், 29 அக்டோபர், 2019

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன், இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது, குமரிக் கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளதாக தெரிவித்தார். 
அங்கு வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவி வருவதால், அது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் எனவும் அவர் கூறினார்.இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்ததாக தெரிவித்தார். 
மேலும் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். சென்னையை பொறுத்தவரை லேசானது முதல் மிதான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார். 
credit ns7.tv