திங்கள், 21 அக்டோபர், 2019

பல தலைமுறைகளாக போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள்!

Image
கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள அம்மாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட மூன்று கிராம மக்கள் பல தலைமுறைகளாக பவானி ஆற்றை கடக்க ஆபத்தான பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளன அம்மாபாளையம், ராக்கிணாம்பாளையம், கணேசன்புதூர் ஆகிய கிராமங்கள். இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. போதிய சாலை வசதியில்லாததால், இந்த கிராமங்களுக்கு இதுவரை பேருந்துகள் இல்லை. எனவே, பவானி ஆற்றைக் கடந்து அக்கரையில் உள்ள அந்தியூர் - சத்தியமங்கலம் சாலையை அடைந்து அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு சென்று வருகின்றனர். அல்லது சுமார் 5 கிலோ மீட்டர் நடந்து சென்று மேவானி என்ற ஊரை அடைந்து பேருந்து பிடிக்க வேண்டும்.

பவானி ஆற்றை இக்கிராமத்தில் இருந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பரிசலில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். விளைபொருட்களை அருகில் உள்ள சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகளும் வேதனைப்பட்டு வருகின்றனர். இங்குள்ள ஆரம்பப்பள்ளியில் பணிபுரியும் இரண்டு ஆசிரியர்களும் தினமும் உயிர் பயத்துடன் பரிசலில் வந்து செல்கின்றனர். 

கடந்த காலத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனை செல்ல ஆற்றைக் கடக்க முயன்ற கர்ப்பிணிகள், வயதான நோயாளிகள் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பவானி ஆற்றைக் கடக்க பாலம் கட்டித் தர வேண்டும் என்ற தங்களது பல ஆண்டுகால கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் பொதுமக்கள். பவானி ஆற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைக்கள் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அதில் ஒன்றை அம்மாபாளையத்தில் அமைத்து அதில் போக்குவரத்துக்கு வழிவகை செய்யவேண்டும் என்றும் இக் கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 
credit ns7.tv

Related Posts:

  • பட்டா மாற்றம் செய்வதில் ... ..மூன்று இனைப்புகள் பயன்படுத்தப்படுகிறது........இனைப்பு 1.. ..பட்டா மாற்ற ...ஆவணங்களை ..கி.நி.அ ரிடம் கொடுக்கும் போது,அவர் தரும் ஒப்புகை ரசீது தான… Read More
  • குடல்புண்ணை குணமாக்கும் குடல்புண்ணை குணமாக்கும் பச்சை வாழைப்பழம்! … Read More
  • காணவில்லை. அவசியம் பகிருங்கள்.... காணவில்லை..!!! காணவில்லை..!! நேற்று மாலை முதல் இந்த படத்தில் இருக்கும் இந்த சிறுவன் காணவில்லை. பெயர் சுலைமான்வேலூர் மா… Read More
  • கெய்ல் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி. திமுக + காங் .அரசின் அடுத்த துரோகம் அம்பலம் . . . :.--கடந்த மைனாரிட்டி திமுக அரசில்GAIL கெய்ல் நிறுவனம்விளைநிலங்கள் வழியாக குழாய் பதித்து கேஸ் கொண… Read More
  • குர்ஆன் அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்… Read More