சனி, 19 அக்டோபர், 2019

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பரப்புரை ...!

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. 
2 தொகுதிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 16-ம் தேதி முதல் 2 தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் சீட்டுகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. நாங்குநேரி தொகுதியில் 23 வேட்பாளர்களும் விக்கிரவாண்டி தொகுதியில் 8 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். 
நாங்குநேரி தொகுதியில், மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ஷில்பா பிரபாகர் சதீஷ், தேர்தல் பொது பார்வையாளர் விஜயா சுனிதா, செலவின பார்வையாளர் அஜய்குமார் சிங் உள்ளிட்டோர் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். 
விக்கிரவாண்டி தொகுதியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சுப்பிரமணியன், தேர்தல் பொதுப் பார்வையாளர் சினு வீர பத்ரடு ஆகியோர் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர். பரப்புரை  இன்று மாலை நிறைவடைவதையொட்டி, வெளியூர் நபர்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
credit ns7.tv