திங்கள், 14 அக்டோபர், 2019

அதிமுகவினருக்கு துரைமுருகன் கேள்வி!

Image
தமிழகத்தில் எந்த வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தாமல் ஓட்டு கேட்க அதிமுகவிற்கு என்ன உரிமை உள்ளது என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். 
நெல்லைமாவட்டம் களக்காட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், பச்சையாறு, கொடுமுடியாறு கடனாநதி, நம்பியாறு, உள்ளிட்ட 46 அணைகள் திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதை சுட்டிகாட்டினார். 
தற்போது உள்ள அமைச்சர்கள் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதாக விமர்சித்த அவர், பணத்தை நம்பியே அதிமுகவினர் தேர்தலை சந்திக்கின்றனர் எனவும் துரைமுருகன் சாடினார்.

credit ns7.tv