வியாழன், 24 அக்டோபர், 2019

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!

credit ns7.tv
Image
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
தமிழகத்தில் காலியாக இருந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று புதுச்சேரி மாநிலத்தில் காமராஜ் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு, நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகிளில், வாக்கு எண்ணும் மையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.