வெள்ளி, 18 அக்டோபர், 2019

வரும் 21,22ம் தேதிகளில் தமிழகத்தின் அநேக இடங்களில் மழை...!

Image
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் புவியரசன், வெப்பச்சலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறினார். 
➤குறிப்பாக நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். வரும் 21, 22ம் தேதிகளில் தமிழகத்தின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறினார். 
➤அக்டோபர் ஒன்றாம் தேதி முதல், இன்று வரை தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மழை அளவில், 8 சென்டி மீட்டர் கிடைத்துவிட்டதாகவும் புவியரசன் கூறினார். 
➤காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய கேரள கடற்கரை பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் புவியரசன் அறிவுறுத்தியுள்ளார். 

credit ns7,tv

Related Posts:

  • கோடை காலத்தில்அதிகம் வியர்க்கும். அதனால் உடலின் நீர்ச்சத்து குறைந்து தாகம் எடுக்கும். அப்போது நாம் தண்ணீர், குளிர்பானத்தை அருந்துவோம். ஐஸ்கிரீம் சாப… Read More
  • இலவச விசா மற்றும் வேலைவாய்ப்பு! துபையில் இலவச விசா மற்றும் வேலைவாய்ப்பு!பொருளாதரத்தில் மிகவும் நலிவடைந்த முஸ்லிம் இளைஞர்களுக்கு உதவும் வகையில் துபையில் முன்னணி நிறுவனத்… Read More
  • சாலையோர ஜூஸ் கவனம் பயணங்களில் சூரியன் ஸ்ட்ரா போட்டு நீரை உறிஞ்ச, நாம் தஞ்சமடைவது சாலையோரங்களில் இருக்கும் சாத்துக்குடி, கரும்பு ஜூஸ் கடைகளில்தான். சாத்துக்குடியும், … Read More
  • சில எண்ணெய்களின் மருத்துவ குணங்கள். எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணை உணவுப் பொருளாகவும், மருந்து பொரு ளாகவும், வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது. எளிதாக சரும… Read More
  • கோடைக் கால செம்பருத்தி ஜூஸ் செம்பருத்திப்பூக்கள் & 15சர்க்கரை & கிலோமுதலில் செம்பருத்திப்பூவை எடுத்து காம்புப்பகுதி, மகரந்தம் இவற்றை நீக்கிவிட்டு இதழ்களை மட்டும் தனியே … Read More