வெள்ளி, 11 அக்டோபர், 2019

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ்!

Image
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீனை ரத்து செய்ய கோரிய அமலாக்கத்துறை மனுவுக்கு பதிலளிக்க ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்துக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 5-ல் முன்ஜாமீன் வழங்கியது. சிபிஐ சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி Suresh Kumar Kait  முன்பு விசாரணைக்கு வந்தது. 
அப்போது, அமலாக்கத்துறை மனுவுக்கு நவம்பர் 29ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

credit ns7.tv