ஞாயிறு, 27 அக்டோபர், 2019

அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி!

Image
சென்னையில் அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் உரிய சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு ஆதரவாக பணியில் உள்ள பிற பயிற்சி மருத்துவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 
இந்தப் போராட்டத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் உரிய நேரத்தில் சிகிச்சை பெறமுடியாமல் அவதியடைந்துள்ளனர். 
credit ns7.tv