வெள்ளி, 25 அக்டோபர், 2019

மக்கள் நீதி மய்யம் கட்சி எச்சரிக்கை!

Image
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறித்து விஷமத்தனமான செய்திகளை பரப்புவதை நிறுத்தாவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில தினங்களாக கமல்ஹாசன் புகைப்படங்களை போட்டோஷாப் செய்து அவரது ட்விட்டர் பதிவு போலவும், சீனப் பிரதமருக்கு கவிதை எழுதியது போலவும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பொய்யான தகவல் என மறுப்பு தெரிவித்துள்ள கட்சி நிர்வாகம், எங்கள் கட்சி தலைவரின் பலத்தை பயன்படுத்தி வேண்டுமென்றே சிலர் விஷம பிரச்சாரத்தை செய்வதாகவும், இது போன்ற நாகரிகமற்ற செயல் கண்டிக்கத்தக்கது என கூறப்பட்டுள்ளது. 
மேலும் இது போன்ற விஷமத்தனமான செய்திகளை பரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சி தொடர்பான விஷம பிரச்சாரங்கள் பரவினால் உடனடியாக கட்சி தலைமைக்கு தெரிவிக்குமாறு தொண்டர்களுக்கு கட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது

credit ns7.tv