திங்கள், 21 அக்டோபர், 2019

பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு..!


Image
கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது அடக்குமுறையை ஏவினாலோ அல்லது கைது செய்து சிறையில் அடைத்தாலோ கம்யூனிசத்தை ஒழித்துவிட முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார். 
கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் வகையில் சென்னை புரசைவாக்கத்தில் இன்குலாப் ஜிந்தாபாத் என்ற பெயரில் நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத், மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய பிரகாஷ் காரத், கம்யூனிஸ்ட் கட்சியினர் வெளிநாட்டு ஏஜெண்ட்கள் என்று தவறான தோற்றத்தை மக்கள் மத்தியில் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்ஸூம் உருவாக்கி வருவதாக குற்றம்சாட்டினார். 
credit ns7.tv