திங்கள், 28 அக்டோபர், 2019

அதிக கட்டணம் வசூலித்த 9 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை!

Image
தீபாவளி பண்டிகையையொட்டி அதிக கட்டணம் வசூலித்த 9 ஆம்னி பேருந்துகள் மீது அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.  
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார் வந்தன. அதன்பேரில், தமிழக அரசு போக்குவரத்து துறை சிறப்பு குழுக்களை அமைத்து அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலித்த 9 ஆம்னி பேருந்துகள் மீது, பயணிகள் அளித்த புகாரின் பேரில், சிறப்பு குழு நடவடிக்கை மேற்கொண்டது. 
பயணிகளிடம் வசூலித்த கூடுதல் கட்டணத்தை வாங்கிக் கொடுத்த அதிகாரிகள், ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தனர். இதுவரை 27 லட்சம் ரூபாய் இணக்க கட்டணமும், ஒரு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் வரியாகவும் வசூலித்துள்ளனர். 

credit ns7tv