ஞாயிறு, 10 நவம்பர், 2019

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழக கடல்பகுதியில் மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை என்றும், ஆனால் புல்புல் புயல் காரணமாக ஒரிசா, மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
credit ns7.tv