செவ்வாய், 12 நவம்பர், 2019

ஆசிரியர் பயிற்சித் தேர்வு முடிவுகளை மறு பரிசீலனை செய்ய மாணவர்கள் கோரிக்கை!

Image
தமிழகம் முழுவதும் ஆசிரியர் பயிற்சித் தேர்வெழுதிய 4 ஆயிரம் பேரில் 105 பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளதால், தேர்வு முடிவுகளை மறு பரிசீலனை செய்ய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சி தேர்வில் நான்காயிரம் பேர் தேர்வெழுதி, வெறும் 105 மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தோல்விக்கு பேராசிரியர்கள் மற்றும் தேர்வுத்துறையினர் இடையே ஏற்பட்ட மோதலே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
இந்நிலையில் ஏப்ரல் மாத தேர்வை ரத்து செய்யக்கோரி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனு அளித்தனர். நெல்லை மாவட்டத்தில் 855 பேர் தேர்வெழுதிய நிலையில், 24 பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில், விடைத்தாளை சரியாக திருத்தவில்லை என 187 பேராசிரியர்களுக்கு மெமோ வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கத

CREDIT NS7.TV